Jailer: 'ஜெயிலர்' படத்தின் இமாலய வெற்றி.. நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் பரிசு.!

‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ‘பீஸ்ட்’ படத்தால் ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கிய நெல்சன், ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரஜினியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் யாரை இயக்க போகிறார் என்பது தான் கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

‘ஜெயிலர்’ படம் யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ நெல்சனுக்காக ஹிட்டடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சிநிமாவிய்ல் இயக்குனராக அறிமுகமான நெல்சன், தனது முதல் படத்திலே வித்தியாசமான மேக்கிங்கால் கவனம் ஈர்த்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். பிரியங்கா மோகன், வினய், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் ‘டாக்டர்’ படம் வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது ‘டாக்டர்’ படம்.

இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் விஜய்யுடன் இணைந்தார் நெல்சன் திலீப்குமார். மிகுந்த எதிர்பார்ப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ‘பீஸ்ட்’ படம் உருவானது. படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாகி ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது. இதனால் ஜெயிலரை இயக்கும் வாய்ப்பு கூட நெல்சன் கை நழுவி போகும் நிலை ஏற்பட்டது.

ஜெயிலரின் இமாலய வெற்றி: அடுத்த படம் குறித்த ஷாக் தகவலை வெளியிட்ட நெல்சன் திலீப்குமார்.!

இதையெல்லாம் தாண்டி ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி முடித்தார் நெல்சன் திலீப்குமார். கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்தப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி தீர்த்துவிட்டனர். ரொம்ப நாட்களுக்கு பிறகு ரஜினியின் மாஸ் காட்சிகள் நிறைந்த படமாக வெளியாகியுள்ளதாக ஜெயிலரை பாராட்டி தள்ளினார்கள் ரசிகர்கள். வசூலிலும் இந்தப்படம் சக்கை போடு போட்டது. ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றியால் நெல்சனின் மார்கெட் தற்போது எகிறியுள்ளது.

இதனால் அவரின் அடுத்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலே நெல்சன் தனது அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் ஹீரோ என்ற முடிவெல்லாம் எடுக்கப்படாத நிலையில், நெல்சன் தங்களுடைய பேனரில் தான் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரும்புகிறது.

இதனிடையில் நெல்சன் திலீப்குமார் தொடர்ச்சியாக டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி உள்ளதால், தனது அடுத்த படத்திற்கு கேப் விட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் படம் இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்.. விஜய் செய்த காரியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய நெல்சன்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.