32 நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில்..

32 நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில் இடம்பெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்த மாநாட்டின் தலைவரான சீனாவின் யின் ஷுன் தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2023.12.12 அன்று அலரி மாளிகையில் சந்தித்தார்.

கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், சீனத் தூதுவர் சி ஷென் ஹாங், சீன தேசிய சமய விவகாரங்கள் நிர்வாகத் தலைவர் சென் ரே பொங் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.