சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ள்ளது. இன்று அந்த அலுவலகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அண்ணாமலை அப்போது செய்தியாளர்களிடம், “ஆளும் கட்சி சார்ந்து பேச சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சபாநாயகர் சட்டமன்றத்தில் நடுநிலையாக நடக்கவில்லை. மாறாக அவர் தி.மு.க. உறுப்பினர் போலப் பேசுகிறார். எனவே ஆளுநர் […]
