சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அடங்காப்பிடாரியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என காட்டமாக கண்டனம் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையில், அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்தியஅரசின் அமைப்புகள், எதிர்க்கட்சியினரை குறிவைத்து தூக்கி வருகின்றன. டெல்லி மதுபான கொள்ளை வழக்கில், 9முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராக டெல்லி […]