ஐ.பி.எல்; ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நாளை மோதல்

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோவை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேவேளையில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

கார் விபத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ள பண்ட் தலைமையிலான டெல்லி அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும். அதேவேளையில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்க கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.