மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற நுவரெலிய மாவட்ட பருவகால வசந்த விழா

எழில் கொஞ்சும் நுவரெலியாவின் பருவகால வசந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு நுவரெலிய நகரத்தின் மத்திய விமர்சையாக நேற்று (01) இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் குதிரையேற்றப் பிரிவின் குதிரைச் சவாரியுடன் ஆரம்பமான வசந்த விழாவில் நடனம், நாட்டியம், பாண்டு வாத்தியம் உட்பட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், சுற்றுலாப் பிரிவினர், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நுவரெலிய வசந்த விழா ஏப்ரல் மாதம் முழுவதும் நுவரெலியாவின் அழகை இரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக குதிரைப்பந்தயம், மோட்டார் வாகனப் பந்தயம், பூக்களின் கண்காட்சி உட்பட பல களியாட்ட நிகழ்வுகளை நுவரெலிய நகர சபை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.