சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 469 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 02 அதிகாலை நோரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கொண்டு வந்து போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு லொறி வண்டி (01) கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, இன்று (2024 ஏப்ரல் 02) காலை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் நொரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மெற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி வண்டியொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, லொறி வண்டியில் பதினாறு (16) சாக்குகளில் பொதி செய்யப்பட்ட 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த லொறி வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி வண்டி (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.