Ayothi: `மனிதம் பேசி கவனம் ஈர்த்த படைப்பு' – தயாராகும் இயக்குநர் மந்திர மூர்த்தியின் அடுத்த படம்!

கடந்த 2023ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த படம் `அயோத்தி’. திரையில் வன்முறைப் படங்கள் மத்தியில் மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், அன்பையும் விதைக்கும் படமாக வந்திருந்தது.

அந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற அறிமுக இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்திக்கு, விகடனின் நம்பிகை விருதும் கொடுத்து கௌரவித்தோம்.

இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி. அன்புச்செழியன் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தப் படம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

‘அயோத்தி’

”மந்திரமூர்த்தியின் முதல் படமான ‘அயோத்தி’ மனிதத்தை மலர வைத்து, சக மனிதன் மீதான நம்பிக்கையை, அன்பைப் பேசுகிற படமாக இருந்தது. ஆணாதிக்க, மதவாத எதிர்ப்பு, தகர்த்து மொழி, இனம் கடந்து மலரவேண்டிய பாதையை காட்டிய விதத்தில் கவனம் ஈர்த்தார் இயக்குநர் மந்திர மூர்த்தி. எனவே முதல் படத்தில் அவருக்கு ப்ளஸ் ஆன விஷயங்களை எல்லாம் தனது அடுத்த படத்திலும் வைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ‘அயோத்தி’க்கு தயாரிப்பாளர்கள் அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை.

படத்திலிருந்து..

ஆனால் அப்படத்தின் வெற்றி அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு ‘அயோத்தி’ மிகவும் பிடித்துவிடவே, மந்திரமூர்த்தியை அழைத்து கதைகள் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். இவரும் உடனடியாக சொன்ன கதைதான் இது என்கிறார்கள்.

இப்போது இயக்க உள்ள படமும் மனிதம் பேச உள்ளது. முதல் படத்தைப் போலவே இதிலும் உண்மை சம்பவத்தை கையில் எடுக்கிறார். ஃபீல் குட் படமாக உருவாக இருக்கிறது என்றும் கதை மற்றும் விவாதம் மும்முரமாக நடந்து வருகிறது, அதன் பிறகே நடிகர்கள் தேர்வு நடைபெறும் என்றும் சொல்கிறார்கள். படப்பிடிப்பு மதுரை, திருநெல்வேலி ஏரியாக்களில் இருக்கும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.