சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு பக்தர் ஒருவர் ரூ.1கோடி வைரக்கிரிடம் அளிக்க உள்ளதாக தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு கடந்த 3ஆண்டு கால திமுகவின் ஆட்சியில், பக்தர்கள் மூலம் 9491 கோவில் பணிகளுக்காக ரூ.1,185 கோடி நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , சென்னையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு, அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு பெரியாண்டவருக்கு உபயதாரரால் 12 கிலோ கிராம் வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள […]