தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் கடன் தரும் தமிழ்நாடு அரசு -யாருக்கு கிடைக்கும்?

Muthalvarin Kakkum Karangal Scheme | தமிழ்நாடு அரசு தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது. யாருக்கு கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!

Virat Kohli unique record | விராட் கோலி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்து விராட் கோலி மற்றொரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் விளையாடிய அனைத்து நாடுகளிலும் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு … Read more

Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகை

இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடைய மகன் ஜேசன் சஞ்சய். `லைகா நிறுவனம்’ தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்கவிருக்கிறார், ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான தகவலைச் சில மாதங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது எனச் சமூக வலைத்தளப் பக்கங்களில் பேசப்பட்டாலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து படப்பிடிப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் … Read more

பாஜக அரசு சிறுபான்மை பறித்த மாணவர்களின் உதவித் தொகை : கார்கே

டெல்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜக அரசு சிறுபான்மை மாணவர்களின் உதவித் தொகையை பறித்துள்ளதாக கூறி உள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில், ”நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக) அரசாங்கம் பறித்துள்ளது. இந்த வெட்கக்கேடான அரசாங்க புள்ளிவிவரங்கள், மோடி அரசாங்கம் அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய குறைப்புகளைச் செய்தது மட்டுமல்லாமல், சராசரியாக ஆண்டுதோறும் 25 சதவீதம் குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. … Read more

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

அகமதாபாத், இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஜூலை 1, 2024 நிலவரப்படி, 209 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 51 மீனவர்கள் 2021 முதலிலும், 130 மீனவர்கள் 2022 முதலிலும், 9 மீனவர்கள் 2023 முதலிலும், 19 மீனவர்கள் 2024 முதலிலும் சிறையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாலிர் சிறையில் இருந்து … Read more

தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது – பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா

பெங்களூரு, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் ‘டை’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் … Read more

நியூசிலாந்து நாட்டின் வர்த்தகத்துறை மந்திரி ராஜினாமா

வெலிங்டன், நியூசிலாந்தில் நியூசிலாந்து தேசியவாத கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு வர்த்தக துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஆண்ட்ரூ பேலி (வயது 63). கடந்த அக்டோபர் மாதம் தலைநகர் வெலிங்டனில் வணிகர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்ட்ரூ பேலி வணிகர்களுடன் உரையாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆண்ட்ரூ அந்த நபரை அவதூறாக விமர்சித்தார். அவரது இந்த செயலுக்கு கடும் … Read more

Labham Webinar: GULF நாடுகளில் வசிக்கிறீங்களா? இந்தியாவில் செல்வம் சேர்ப்பது எப்படி?

நீங்க சவுதி அரேபியா, ஓமன், பெஹ்ரேய்ன், கத்தார் போன்ற வளைகுடா (GULF) நாடுகளில் வாழ்றீங்களா? இல்லை அங்கே வேலை பார்க்குறீங்களா? நீங்க என்னைக்காவது கீழ்க்கண்டவற்றை யோசிச்சு இருக்கீங்களா? * வெளிநாட்டில் சம்பாத்திக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செஞ்சு பெருக்குவது எப்படி? * இந்தியா திரும்பும்போது, நிறைய சொத்துகளைச் சேர்த்து வைப்பது எப்படி? * முதலீடு செஞ்சா அதற்கான வரி மற்றும் சட்ட திட்டங்கள் என்ன? * இந்தியாவில் வாழும் குடும்பத்தினர் பெயரில் முதலீடு செய்யலாமா? இதையெல்லாம் யோசிச்சு இருந்தீங்கன்னா, … Read more

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்: ஊழியர்கள் விடுப்பால் வெறிச்சோடிய மதுரை ஆட்சியர் அலுவலகம்

மதுரை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று (பிப்.25) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் … Read more

ஆந்திராவில் கோயிலுக்குச் சென்ற பக்தர்களை தாக்கிய யானைக் கூட்டம்: 3 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் காட்டுவழியாக அதிகாலையில் கோயிலுக்குச் சென்ற பக்தர்களை யானைக் கூட்டம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தலகோணா கோயிலுக்குச் சென்ற 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவை யானைக் கூட்டமொன்று தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர், 3 பேர் காயமைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மற்ற இருவர் ஆபத்தான கட்டத்தைத் கடந்து விட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண், இருவர் … Read more