நீலகிரி: `12 ஆண்டுகளுக்கு ஒருமுறை' – விரதமிருந்து கோவில் கூரை மாற்றும் தாேடர் பழங்குடியினர்

பாரம்பரியம் மாறாமல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கூரை மாற்றும் தாேடர் பழங்குடியினர். Source link

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. … Read more

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் மகர் துவார் படிக்கட்டுகளில் நின்றவாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சுமார் 50 எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மோடி அரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் அவர்கள் … Read more

பிரதமர் மோடியுடன் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும் சந்தித்துப் பேசினர். வங்கக்கடல் பகுதியில் உள்ள நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பான பிம்ஸ்டெக்-ன் 6-வது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை, தாய்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர … Read more

குட் பேட் அக்லி.. மாஸ் லுக்கில் அஜித்.. டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் இதோ

Ajith Good Bad Ugly Trailer: இன்னும் சில தினங்களில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாக உள்ளது என்கிற அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வில் திமுக இரட்டை வேடம் – துணைமுதல்வர் கள்ள மவுனம்! அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக கூறிய துணைமுதல்வர் உதயநிதி, அந்த ரகசியத்தை தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் என்று குற்றம் சாட்டியதுன், பேரவையில் தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக சபாநாயர் மீது குற்றம்சாட்டி அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  கூறினார். “தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் … Read more

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 54 பேர் பலி

காசா, இஸ்ரேல்-காசா போர் கடந்த 2023, அக்டோபர்-7 முதல் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. அடுத்தகட்டமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடக்க இருந்த நிலையில் பணய கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் இஸ்ரேல்- காசா போர் மீண்டும் மூண்டு, தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு, பேசும்போது, “ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க காசா பகுதி முழுவதும் … Read more

WAQF Bill: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' – தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பனையூர் ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் … Read more

சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: பின்னணி என்ன?

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் கேரளா, ஆந்திரா கிளைகள் என ஒரே நேரத்தில் பல்வேறு கிளைகளிலும் சோதனை நடந்தது. அதில் சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் கணக்கில் வராத … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை விண்ணில் செலுத்த முடியாது. எனவே மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் விண்வெளித்துறை … Read more