அரசியல் எனக்கு முழுநேர பணி அல்ல: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்

லக்னோ: அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என தகவல் … Read more

நகர்ப்புற ஏரிகள் சீரமைப்புக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு’

சென்னை இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க  நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, சிக்கராபுரம், மணிமங்களம் ஏரிகளில் கூடுதல் நீரை சேமித்து பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் கே.என்.நேரு, “சிக்கராயபுரம் கல் குவாரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக ரூ.40 கோடியில் நீர்வளத்துறை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை … Read more

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் நிதிக்கு உட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின் தகவல்

சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுக்கும் பணிகளை, நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக் கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது? சுங்கக்கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நீங்கள் … Read more

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் 140 கி.மீ. பாதயாத்திரை: துவாரகா கோயிலுக்கு செல்கிறார்

புதுடெல்லி: உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது. ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் ஏப்ரல் 10-ம் … Read more

இந்தியா வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உறுதி

வாஷிங்டன்: நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் தாய்நாடான இந்தியாவுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்வேன் என்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்கு தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட … Read more

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம்  பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை  மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி … Read more

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க “உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் அசைக்க முடியாத அசுர பலத்துடன் இருக்கிறது அ.தி.மு.க. இன்று மட்டுமல்லாமல், எப்போதுமே தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்ப்பதற்கு, வெல்வதற்கு… அ.தி.மு.க-வைத் தாண்டி வேறொரு கட்சி இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையை யாராலும் மாற்ற முடியாது. … Read more

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லை: பேரவையில் உதயநிதி விளக்கம்

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் கட்சி பாகுபாடு பாராமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பேசிய பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியது: “எதிர்க்கட்சித் தலைவரும், உறுப்பினர்களும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ குறித்துப் பேசினர். அது … Read more

குஜராத் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

பனஸ்கந்தா: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர். குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து … Read more

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்: சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்

பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் ராஜதந்திர உறவுகளை கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஏற்படுத்திக் கொண்டன. இதன் 75-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது திரவுபதி முர்முவிடம், “சீனாவும் இந்தியாவும் … Read more