Airtel News latest : சென்னை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வெறும் 10 நிமிடங்களில் சிம் கார்டுகளை வழங்குவதற்காக ஏர்டெல் பிளிங்கிட்டுடன் (Blinkit) இணைந்துள்ளது வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு தாங்களாகவே கேஒய்சி (KYC) செயல்முறை மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இயக்குவதற்கு (activation) இது உதவுகிறது. ஒரு முன்னோடி நடவடிக்கையாக பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சென்னை வாடிக்கையாளர்களுக்குப் பத்து நிமிடங்களுக்குள் சிம் கார்டுகளை வழங்க ஒரு சூப்பர் பிளானை கொண்டு வந்தது. இதற்காக பிளிங்கிட் நிறுவனத்துடன் ஏர்டெல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்த வகை சேவை இப்போது முதன்முதலாக நாட்டின் 16 நகரங்களில் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மேலும் அதிக மாநகரங்களிலும் நகரங்களிலும் இந்தச் சேவையை வழங்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ரூ. 49 இந்த சேவைக்கு செலுத்த வேண்டும். இதன் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் குறைந்தபட்சம் 10 நிமிடங்களில் தங்கள் வீட்டு வாசலில் சிம் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். சிம் கார்டு வழங்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான கேஒய்சி அங்கீகாரம் மூலம் எளிய இயக்க செயல்முறையைப் பயன்படுத்தி எண்ணை ஆக்டிவேஷன் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு திட்டங்கள் ஆகிய இரண்டில் இருந்தும் தேர்வுசெய்யலாம். அல்லது ஏர்டெல் நெட்வொர்க்கில் போர்ட்டிங் (porting) செய்ய எம்என்பி-யைத் (MNP) தூண்டும் விருப்பத்தேர்வைப் பெறுவார்கள்.
மேலும் இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் உதவி மையத்தையும் அணுகலாம். புதிய வாடிக்கையாளர்கள் உதவி தேவைப்பட்டால் 9810012345 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். சிம் கார்டு வழங்கப்பட்ட பின் வாடிக்கையாளர்கள் 15 நாட்களுக்குள் சிம்மை இயக்குவது கட்டாயம் ஆகும்.
இந்தப் பார்ட்னர்ஷிப் குறித்து கருத்து தெரிவித்த பாரதி ஏர்டெல்லின் கனெக்டட் ஹோம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் மார்க்கெட்டிங் இயக்குநருமான சித்தார்த் ஷர்மா, “வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதே ஏர்டெல்லில் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாகும். 16 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு 10 நிமிடத்தில் சிம் கார்டு டெலிவரிக்காக பிளிங்கிட் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் காலப்போக்கில் இந்தக் கூட்டு முயற்சியைக் கூடுதல் நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்
சென்னை, அகமதாபாத், சூரத், தில்லி, குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், போபால், இந்தூர், பெங்களூரு, மும்பை, புனே, லக்னோ, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் உட்பட 16 முக்கிய நகரங்களில் சிம் கார்டு டோர் டெலிவரி சேவை கிடைக்கும்.