குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மீது ரசிகர்கள் வைத்த மேட்ச் பிக்சிங் புகார் – உண்மை என்ன?

Kusal Mendis : ஐபிஎல் 2025 தொடரின் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான இரண்டாவது குவாலிஃபையர் அல்லது முதலாவது எலிமினேட்டர் போட்டி நியூ சண்டிகர் முலான்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கும், தோல்வி அடையும் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் என்ற பரபரப்பான நிலையிலேயே இரு அணிகளும் களம் கண்டன. போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது. அத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறியது. இந்த சூழலில் குஜராத் அணியின் தோல்விக்கு முழுக்க முழுக்க அந்த அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் குவித்தது. ரோகித் 81, பேரிஸ்டோவ் 47, சூர்யகுமார் 33 ரன்கள் குவித்தனர். அதனைத் தொடர்ந்து விளையாடி குஜராத் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வெளியேறியது. குஜராத் அணியில் சாய் சுதர்சன் 80 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நாளை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் எலிமினேட்டர் 2 போட்டியில் விளையாடும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஆர்சிபி அணியுடன் சாம்பியன் பட்டத்துக்கு மோதும்.

குசல் மென்டிஸ் மேட்ச் பிக்சிங்

May 30, 2025

May 30, 2025

(@TukTuk_Academy) May 30, 2025

இந்தப் போட்டியில் குஜராத் அணியின் பீல்டிங் மட்டும் சிறப்பாக இருந்திருந்தால் நிச்சயம் அந்த அணி வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்புகள் இருந்தது. ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு இரண்டாவது ஓவரிலேயே கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ். அடுத்த ஓவரில் ஜெரால்டு கோட்சியும் ரோகித் கேட்சை கோட்டைவிட, அதற்கு மேல் அவர் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தால் ரோகித் சர்மா விடுவாரா என்ன?. இதுமட்டுமல்லாது சூர்யகுமார் கொடுத்த லட்டு மாதிரியான கேட்சையும் விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் கோட்டைவிட்டார். பேரிஸ்டோவுக்கு ஒரு கேட்ச் மிஸ். 

ஐபிஎல் நிர்வாகம் விசாரிக்குமா?

போதாக்குறைக்கு பேட்டிங் ஆடும்போது தானே ஸ்டம்பு மீது மோதி ஹிட் விக்கெட்டாகி வெளியேறினார் குசல் மென்டிஸ். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் குசல் மென்டிஸ் மீது கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்தனர். மும்பை அணி வெற்றி பெறுவதற்காக மென்டிஸ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். கோபத்தில் குசல் மென்டிஸை கடுமையாக திட்டி வருகின்றனர். அதேநேரத்தில் குசல் மென்டிஸ் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ரசிகர்கள் ஆவேசத்தில் இப்படியான குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி வருகின்றனர். ஐபிஎல் நிர்வாகம் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரிய வரும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.