'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' – சத்தீஷ்கார் டி.ஜி.பி.

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பகுதி நக்சல்களின் ஒரு முக்கிய மையமாக அறியப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த … Read more

ஐ.பி.எல் 2025: மாபெரும் சாதனையில் வார்னரை சமன் செய்து கோலியை நெருங்கிய கே.எல்.ராகுல்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி … Read more

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் பயங்கரவாதி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியுள்ளார்.இந்த விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கி சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திய நபரை கைது செய்த போது, பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும் என்று … Read more

வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்… மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்துள்ளது, மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 20 ஆம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்தது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டும் ஏற்பட்டு இருந்தது. சேதம் அடைந்த மின் கம்பம் குறித்து விகடன் தளத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதில் … Read more

அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துக்கு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கண்டனம்!

புதுச்சேரி: தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை போற்றும் வகையில் புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி சார்பில் தேசியக்கொடி பேரணி இன்று (மே 22) நடைபெற்றது. தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து நோணாங்குப்பம் படகு குழாம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை வரை நடைபெற்ற பேரணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேசியக்கொடி மற்றும் … Read more

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு பாக்-ஐ துருக்கி வலியுறுத்தும்: இந்தியா எதிர்பார்ப்பு

புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு, பயங்கரவாத சூழலுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானை ஈடுபடுமாறு துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத சூழலுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தானை துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒருவருக்கொருவரின் கவலைகளின் உணர்திறன்கள் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன. … Read more

கேரளாவில் பரவும் கொரோனா.. மக்களே உசார்.. முககவசம் அணிய அறிவுறுத்தல்!

அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், முககவசம் அணியுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

Jailer 2 Update: ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு? சூப்பர்ஸ்டார் கொடுத்த தரமான அப்டேட்

Rajinikanth Jailer 2: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட் ஒன்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இதன் விவரத்தை இங்கே காணலாம்.

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.   

தமிழகத்துக்கு தண்ணீர் திரக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.’ இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக  நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில், தென்மேற்கு பருவமழை, 2025, மே மாதம் … Read more