போராடி வீழ்ந்த குஜராத்.. குவாலிஃபையர் 2வில் பஞ்சாப்புடன் மோதும் மும்பை!

2025 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று (மே 30) நியூ சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜானி பேரிஸ்டோவ் களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டை இழக்க 84 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி … Read more

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அப்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் … Read more

நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை

போபால், மத்தியபிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாம்ரைட், கடந்த கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்சல் அனுப்பியிருந்தார். அதில் இந்திய தேசியக் கொடி, வெடிபொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்தன. புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டிடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு … Read more

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி… சதம் விளாசிய கருண் நாயர்

கேன்டர்பரி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் விளையாடுகிறது. இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜுரெல், ஷர்துல் தாகூர், நிதிஷ்குமார் ரெட்டி போன்ற அனுபவ வீரர்கள் இடம் … Read more

அமெரிக்கா: நியூயார்க் தெருவில் நடந்த இந்திய திருமண ஊர்வலம்

நியூயார்க், இந்திய திருமணங்கள் ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றவை. வித்தியாசமான அழைப்பிதழ்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தொடங்கி ஆடம்பரமான விருந்துகள், பிரமாண்டமான ஊர்வலம் என திருமண கொண்டாட்டங்கள் களை கட்டும். சில இடங்களில் பிரமாண்ட திருமண ஊர்வலம் நடக்கும் போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுவதையும் காண முடியும். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய திருமண ஊர்வலம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அங்குள்ள வால் ஸ்டிரீட் பகுதியில் லோயர் மன்ஹாட்டன் தெருக்களில் சுமார் 400 … Read more

"RCB ஃபைனலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அணியை தடுத்தாக வேண்டும்!" – CSK வீரர் அஸ்வின் சொல்வதென்ன?

ஐபிஎல்-லில் 17 சீசன்களாக சாம்பியன் பட்டம் வெல்லாத, அதேசமயம் அதிக ரசிகர்கள் ஆதரவு கொண்ட ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி. 2009, 2011, 2016 ஆகிய சீசன்களில் மூன்று விதமான கேப்டன்கள் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் பெங்களூரு அணியால் கோப்பை வெல்ல முடியாமல் போனது. இதனால், வழக்கம்போல இந்த சீசனில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்கியது ஆர்.சி.பி. RCB அதோடு, கோலியின் … Read more

சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழை!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பிற்பகல் மற்றும் மாலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நகரில் குளிர்ச்சி நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மே மாதத்திலேயே தொடங்கியது. கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் தீவிரமாக உள்ளது. பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகரில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் … Read more

“மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் 416% அதிகரிப்பு” – கார்கே விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இது 416% அதிகரிப்பு ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும். மோடி ஜி, … Read more

ஐபிஎல் சாதனை வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மோடி பாராட்டு

பாட்னா’ ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரீந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பிர்தமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14)ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 35 பந்தில் செஞ்சுரி அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆவார்நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை பந்தாடியது. இதில் குஜராத் நிர்ணயித்த 210 ரன் இலக்கை … Read more

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

டெல்லி, ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா, … Read more