ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜெய்ப்பூர், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் … Read more

போர் தொடக்கத்தை நீங்கள் சொல்லுங்கள்..முடிவை நாங்கள் சொல்கிறோம் – பாகிஸ்தான் கொக்கரிப்பு

இஸ்லாமாபாத், காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள்.அந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நேரத்தில், எந்த இலக்கு மீது தாக்குதல் நடத்துவது என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு முழு … Read more

தேர்தல் ஆதாயத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: திருமாவளவன் விமர்சனம்

மதுரை: தேர்தல் ஆதாயம் கருதியே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறினார். கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மதுரை திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஜெய்சங்கர் விளக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில், பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும் ஐ.நா பொதுச் சபையில் 10 நாடுகள் 2 ஆண்டு காலத்துக்கு நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளன. 2025-26-ம் ஆண்டு காலத்தில் பாகிஸ்தானும் ஐ.நா உறுப்பினராக உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான், … Read more

VJS 52: 'Full Meals Ready' – விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இணையும் படத்தின் அப்டேட்!

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்துக்கான டைட்டில் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. VJS 52 என்ற தற்காலிக தலைப்புடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. #VJS52 shoot wrapped up@MenenNithya @VijaySethuOffl @pandiraj_dir @SathyaJyothi pic.twitter.com/8yHkUHpj2v — Arjun Francis (@ArjunTej14) February 23, 2025 இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சரவணன், யோகி … Read more

மதுரையில் அனுமதி இன்றி இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் :அரசின் அதிரடி முடிவு

மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மதுரையில் 39 மழலையர் பள்ளிகள் அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை, ”மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 64 மழலையர் பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. இவற்றில் 25 பள்ளிகள் மட்டுமே பள்ளிக்கல்வித் துறையிடம் உரிய அனுமதி பெற்று … Read more

பாகிஸ்தான் நடிகர்-நடிகைகளின் இன்ஸ்டாகிராம் இந்தியாவில் முடக்கம்

புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரின் சமூக வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இவர்களை பின்தொடர்பவர்களால் அவர்களின் இன்ஸ்டா பக்கங்களை அணுக முடியவில்லை. பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா … Read more

ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

ஜெய்ப்பூர், 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அதிரடியாக விளையாடினர். பந்துகளை, … Read more

பாதுகாப்பு காரணங்களுக்காக… பாகிஸ்தானில் மே 31 வரை கராச்சி, லாகூர் வான்வெளி மூடப்படும் என அறிவிப்பு

கராச்சி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியுள்ளது. இதன்படி, பாகிஸ்தானில் பதிவு செய்த அனைத்து விமானங்கள், … Read more

வெயில் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா? – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

திருச்சி: வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கும், அருகில் உள்ள மே தின நினைவுச் சின்னத்துக்கும் நேற்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதி வாரி கணக்கெடுப்பு எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்று … Read more