இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன் அசத்துவார் – மஹேலா ஜெயவர்தனே

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் நடப்பு … Read more

நைஜீரியா: வெள்ள பாதிப்புக்கு 151 பேர் பலி

அபுஜா, நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் மொக்வா என்ற நகரம் உள்ளது. வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நகரங்களுக்கு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வார்கள். இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் … Read more

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் இணை நோய் பாதிப்புக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சேத்துக்குழி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (25). ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். தமிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தமிழரசனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, … Read more

இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியது: கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி முன்னிலை

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது. கடந்த மே 26-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,010 ஆக இருந்தது. இது 30-ம் தேதி 2,710 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய … Read more

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்காக ஜப்பானில் சோதனை ஓட்டம் தொடக்கம்

இந்தியாவுக்கான புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி … Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கனமழை வெலுத்து வாங்கியது. இதன் விளைவாக தேசிய நெடுஞ்சாலை-13 இன் பனா-செப்பா பகுதிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரியில் ஏழு பேரை ஏற்றிச் சென்ற வாகனம் அடித்துச் செல்லப்பட்டு பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு கார் செப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவலறிந்த … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; ஸ்வேரெவ் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வேரெவ் 6-2, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் பிளாவியோ கோபோலியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்று … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.15 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 110 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 35.69 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.21 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

இரத்த நாள அழற்சி: நவீன சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ரெட்ரோகிரேட் இண்ட்ரா-ரீனல் சர்ஜரி (RIRS) எனப்படும் சிகிச்சை மூலம் 62 வயது பெண் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகத்தில் இருந்த இரண்டு பெரிய கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன. அவர், இரத்தக் கட்டி ஏற்படுவதைத் தடுப்பதற்கான இரு வெவ்வேறு வகையான மருந்துகளை உட்கொண்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வழக்கமாக ஆர்.ஐ.ஆர்.எஸ் என்பது, 2 செ.மீ வரையிலான அளவுள்ள சிறுநீரகக் கற்களை அகற்றப் பயன்படுத்தப்படும் குறைவான … Read more