இன்று மாலை 4 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ ”சென்னை வானிலை ஆய்வு மையம், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் … Read more

மராட்டிய முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

மும்பை, மராட்டியத்தில் தெற்கு மும்பை நகரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வீடு அமைந்து உள்ளது. வர்ஷா என பெயரிடப்பட்ட அந்த வீட்டுக்கு வெளியே சோலாப்பூரை சேர்ந்த அஜித் மைதகி (வயது 39) என்ற நபர் இன்று திடீரென வந்து தீக்குளிக்க முயன்றார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் கேனுடன் வந்த அவரை மும்பை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். அவரை தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். இதன்பின்னர் மலபார் ஹில் காவல் … Read more

பெங்களூரு அபார பந்துவீச்சு.. 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – … Read more

குழந்தைகள் உள்பட 4 இந்தியர்களின் கொடூர மரணம்; சிறை தண்டனை வழங்கிய அமெரிக்க கோர்ட்டு

வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவுக்கு, கனடா நாட்டின் வழியே இந்தியர்களை கொண்டு செல்லும்போது, 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 இந்தியர்கள் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தனர். இநத் விவகாரத்தில், புளோரிடாவை சேர்ந்த ஹர்ஷ்குமார் ராமன்லால் பட்டேல் (வயது 29) மற்றும் ஸ்டீவ் அந்தோணி ஷாண்ட் (வயது 50) ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மின்னசோட்டா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவர்களில், பட்டேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அந்தோணிக்கு 6 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும் சிறை … Read more

ராமதாஸ் குற்றச்சாட்டு எதிரொலி: நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் அன்புமணி – பாமகவில் நடப்பது என்ன?

விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் … Read more

மகாராஷ்டிர கனமழை பாதிப்புகள்: இதுவரை 16 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நிலச்சரிவு, இடி, மின்னல் தாக்குதல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய மே 24-ல் இருந்தே மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை தொடங்கிய … Read more

நிதேஷ் திவாரியின் ராமாயணத்தில் ராவணன் வேடத்தில் யாஷ்… தசரதனாக அருண் கோவில்…

ராமாயணம் இதிகாசம் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டு இன்றளவும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. இந்தியில் அடுத்ததாக நிதேஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். ராவணனாக கே.ஜி.எப். படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான கன்னட நடிகர் யாஷ் நடிக்கிறார், அதற்காக அவர் ரூ. 150 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் இயக்குனர் … Read more

சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய் விஷ்னோய், மும்பை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.சந்ருகர் ஆகிய 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த 26-ந்தேதி கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த 3 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டு உள்ளார். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

நீங்கள் ஏன் ஓய்வு பெற்றீர்கள்..? ஹர்பஜன் சிங் 8-வயது மகளின் கேள்விக்கு கோலி பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் விடைபெற்றார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு … Read more

இந்தியா அமைதியை விரும்பும் நாடு; இந்தோனேசியாவில் பா.ஜ.க. எம்.பி. பேச்சு

ஜகர்த்தா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் … Read more