போர் நிறுத்தத்தை வரவேற்கும் தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போர் நிறுத்த்தத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதால், பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் … Read more

இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 11-05-2025

Live Updates 2025-05-11 03:24:03 11 May 2025 12:34 PM IST ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை – அரசு பெருமிதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க … Read more

கேப்டன் பதவி கேட்ட விராட்… நிராகரித்த பி.சி.சி.ஐ..? – வெளியான தகவல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது துப்பாக்கி சூடு தாக்குதல்

வாஷிங்டன், அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் ஹார்ட்போர்ட் நகரத்தில் ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. அங்கு நேற்று இறுதிச்சடங்கு நிகழ்வு நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடும்ப உறுப்பினர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார். இதற்கு பதிலடியாக ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். … Read more

India – Pakistan : "பாகிஸ்தான் அதை நிறுத்தும்வரை நிரந்தர அமைதியே கிடையாது" – ஒவைசி சொல்வதென்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் (மே 7) நடத்தியது. அடுத்த நாள் இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த, இந்தியா அதை முறியடித்தது. அதன்பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவிக்க, பிறகு இந்தியாவும் மோதலை நிறுத்த முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக … Read more

ரூ.25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை முகாம் விரைவில் தொடக்கம்

ரூ.25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார். மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில், சட்டப்பேரவை மானியக் கோரிக்கை 2025-26ம் ஆண்டு அறிவிப்பின் கீழ் 1,256 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை, மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னோட்டமாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் … Read more

மணமான மறுநாளே எல்லைக்கு கிளம்பிய ராணுவ வீரர்: பெருமிதத்துடன் வழியனுப்பிய மணப்பெண்

புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண். இந்திய ராணுவப் படையின் வீரர் என்பது பெருமைக்குரிய விஷயம். இப்பணியில் போரின்போது தேசத்துக்கு சேவை செய்வது ராணுவ வீரரின் கடமை. இதை உணர்த்தும் வகையில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவர் பணியமர்த்தப்பட்டு … Read more

‘பாகிஸ்தான் உடன் போரிடுவது இந்தியாவின் தெரிவு அல்ல’ – சீனாவிடம் அஜித் தோவல் விவரிப்பு

புதுடெல்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் தொலைபேசி அழைப்பில் பேசினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘போர் என்பது இந்தியாவின் தெரிவு அல்ல’ என சீன அமைச்சரிடம் அஜித் தோவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையில் நேற்று (மே 10) மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. … Read more

போருக்கு பின் ஜம்மு காஷ்மீரின் நிலை..மக்கள் எப்படியுள்ளனர்? வைரல் வீடியோ!

Jammu Kashmir After India Pakistan Ceasefire Video : இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்பு ஜம்மு காஷ்மீரின் நிலை எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.  

ரவி மோகன் மனைவி ஆர்த்தி குறித்து கெனிஷா போட்ட பதிவு! என்ன நடக்கிறது?

Kenishaa Francis Posts About Aarti Ravi : நடிகர் ரவி மோகன், தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு இன்னும் பிரியாத நிலையில், அவர் கெனிஷாவுடன் பொது வெளியில் தலைக்காட்டி இருக்கிறார். இந்த நிலையில், கெனிஷா வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.