உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு: ட்ரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?

உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். குறிப்பாக, வர்த்தக மோதலில் ஈடுபட்ட சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதிப்பு … Read more

ஐபிஎல் 2025 : குவாலிஃபையர் 1ல் வெற்றி பெறும் அணியே சாம்பியனாகும் – எப்படி தெரியுமா?

IPL 2025 Qualifier 1 Update: ஐபிஎல் 2025-ன் குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதாவது எந்த அணி வெற்றி பெற்றாலும், அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டி விளையாடும். தோல்வியடையும் அணி, நாளை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். இந்த சூழலில்குவாலிஃபையர் 1 குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஐபிஎல் … Read more

‘தக் லைஃப்’ தொடர்பாக கமலஹாசன் மீது கன்னட அமைப்பினர் போலீசில் புகார்… ‘ஒரே மொழி குடும்பமாக இருந்தாலும்… வேறு வேறு’

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் பேசிய கமல்ஹாசன், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார். … Read more

நியூசிலாந்து துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை

புதுடெல்லி, நியூசிலாந்து துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நேபாள நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அதனை முடித்து விட்டு, இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக புதுடெல்லிக்கு இன்று வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வெளியுறவு செயலாளர் அம்ரித் பகதூர் ராய், விமான நிலையத்தில் வரவேற்றார். அவருடன் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இருந்தனர். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் … Read more

ஐ.பி.எல்.: இந்த அணிதான் சாம்பியன்.. இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் அவர்தான் – வாட்சன் கணிப்பு

சிட்னி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினம் முடிந்தது. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. டெல்லி கேப்பிட்டல்ஸ்,சன்ரைசர்ஸ் ஐதராபாத் , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் … Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

மணிலா, இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிலிப்பைன்ஸ் அரசு இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய கடற்கரைகளையும், சுற்றுலா தலங்களையும் காண விரும்பும் இந்தியர்கள், விசா இல்லாமல், 14 நாட்கள்வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கியிருந்து சுற்றி பார்க்கலாம். சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும் இக்கொள்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. மேலும், உரிய விசாவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நிரந்தர வீடோ வைத்துள்ள … Read more

RCB: `இன்னும் ஒரு மேட்ச்தான்…கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!' – ரசிகர்களுக்கு ரஜத் பட்டிதர் மெசேஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. RCB இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். RCB: `விண்வெளி நாயகா!’- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCB அவர் பேசியதாவது, “நாங்கள் எங்களின் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். எப்படி பந்துவீச … Read more

சிறுவாணி குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் எடுக்கப்படும் குடிநீரின் … Read more

“நேரலை விவாதத்துக்கு டெலிபிராம்ப்ட்டர் உடன் வாருங்கள்…” – மோடிக்கு மம்தா சவால்

கொல்கத்தா: “மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம்” என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேலும், நேரலை விவாதத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் … Read more

‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு

பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார். “இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் … Read more