Indo-Pak War: பாதுகாப்பு செயலிகள், அவசர நேரத்தில் உடனடி உதவி பெறலாம்

Smartphone Safety Apps: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை இந்தியா ஆயுதப்படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் 15 நகரங்களின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்க முயற்சித்தது, நேற்றிரவும் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் … Read more

ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த சிரஞ்சீவி

ஐதராபாத் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நடிகர் சிரஞ்சீவி நினைவு கூர்ந்துள்ளார்/ நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ (தமிழில் காதல் தேவதை) படம் வெளியாகி 35 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது. சிரஞ்சீவி, “இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீதேவியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இப்படத்தின் இதயம். ஆரம்பத்தில், நான் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாவதை விரும்பவில்லை. ஆனால் தற்போது அதை நாக் அஸ்வின் … Read more

என்னை வடிவமைப்பதில் சி.எஸ்.கே முக்கிய பங்காற்றியது – தமிழக வீரர் பேட்டி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடரில் குஜராத் அணியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர், … Read more

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ – தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறது. எனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார். தேசிய கல்விக் கொள்கை – 2020 உத்தரவிட … Read more

‘போர்ச் சூழலில் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்திடுக’ – இபிஎஸ்

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய … Read more

ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் பாதுகாப்பு குறித்து முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுடெல்லி: இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7-ம் தேதி இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. பயங்கரவாதிகளும், அவர்களின் முகாம்களுமே குறிவைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, பொதுமக்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் … Read more

மேட்- இன் – இந்தியா ஆகாஷ் ஏவுகணைகள்… பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது எப்படி?

பெஹெல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களை தாக்கிய பிறகு, இரு நாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துவிட்ட நிலையில், கடந்த இரவு முழுவதும் பாகிஸ்தான் சரமாரியாக தாக்குதல்களை மேற்கொண்டது.

மையல் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்தியா – பாகிஸ்தான் போர்: ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும்.. சென்னைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை சேப்பாக்கத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

IPL 2025: ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக ஒத்திவைப்பு… பிசிசிஐ வைத்த ட்விஸ்டை பாருங்க!

IPL 2025, India Pakistan War: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மீதமுள்ளவை ஒரு வார காலத்திற்கு உடனடியாக நிறுத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலான அணி உரிமையாளர்கள், தங்கள் வீரர்களின் நலன் மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள், ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய நபர்களுடனும் உரிய ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை … Read more