‘தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை திட்டம்’ – மத்திய அரசு மீட்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்ற நிலையில் மத்திய அரசு தலையிட்டு படகுகளை மீட்க வேண்டும்! என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி – விமானப்படைத் தளபதி சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் … Read more

தொகுப்பாளினி பிரியங்கா ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

விஜய் டிவியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சேனலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்சிபியுடனான போட்டியிலும் தோல்வி அடைந்தது சிஎஸ்கே…! தோனி புலம்பல்….

பெங்களூரு: நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே, பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். பந்துவீச்சில் இன்று சொதப்பி விட்டோம். கடைசி கட்டத்தில் ஷெப்பர்ட் சிறப்பாக விளையாடினார். எல்லா பேட்டர்களும் யார்க்கரில் விளையாடவில்லை. நவீன யுகத்தில் பேட்டர்கள் … Read more

வியட்நாமின் நோய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது

  வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (04) முற்பகல் வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

நடிகை பெருமாயி காலமானார்.. `விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்'

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார். பெருமாயி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘மனம் கொத்தி பறவை’, விஜய்யின் ‘வில்லு’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக  நடிகர் பசுபதியின் ‘தண்டட்டி’ படத்தில் நடித்த இவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு தனது வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார். … Read more

இரு மாதங்களில் 5 மாணவிகள் தற்கொலை; நீட் ரத்து திட்டம்தான் என்ன? – அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: நீட் தேர்வுக்கு அஞ்சி மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்; இரு மாதங்களில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் … Read more

இம்ரான் கான், பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு  மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோனி உடனே ஓய்வு பெற… 3 முக்கிய காரணங்கள் – சிஎஸ்கேவுக்கு பெரிய நல்லது!

MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. கடந்த 15 சீசன்களாக சிஎஸ்கே தக்கவைத்திருந்த அனைத்து சாதனைகளும், பெருமைகளும் இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக தவிடுபொடியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்திருக்கிறது. சிஎஸ்கேவின் நிலை எந்தளவிற்கு மோசமாகியிருக்கிறது என இதை வைத்தே நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்.  இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு (CSK) மறைக்க கூடிய ஒன்றாக இருந்தாலும், … Read more