இன்று முதல் கர்நாடகாவில் தீவிர கொரோனா பரிசோதனை

பெங்களூரு இன்று முதல் கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது, கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தலைநகர் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில் 9 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நேற்று முன்தினம் ஒரே நாளில் பெலகாவியை சேர்ந்த 25 வயது … Read more

Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போது அதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால் எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்பை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அதை நீக்கிவிடுமாறும் சொல்கிறார்.  என்னுடைய தோழிகள் சிலரும் இதுபோல வேறு வேறு பிரச்னைகளுக்காக கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்கள். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை என்றாலே, கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா…? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்   மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பீரியட்ஸ் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் … Read more

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது: தமிழகத்தில் எங்கெல்லாம் ரெட் அலர்ட்?

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திலும் மழை பரவியுள்ள நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று (மே 24) தொடங்கியது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு … Read more

உ.பி. பல்கலை.யில் போலி சான்றிதழ் வழக்கில் 11 பேர் கைது: 5 புலனாய்வு அமைப்புகள் விசாரணை

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஹாபூரில் தனியாருக்கு சொந்தமான மோனாட் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநில சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்)கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தியது. இதில் சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன. இந்த வழக்கில் பல்கலையின் தலைவர் … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!!

Tamil Nadu government : கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   

திகட்டவே திகட்டாத டிஎம்எஸ்…

திகட்டவே திகட்டாத டிஎம்எஸ்… சிறப்புக் கட்டுரை : மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் திரைத்துறை.. அதில் மிகப்பெரிய வெற்றியை பெற்று அதை பயன்படுத்தி அரசியலிலும் நாடே கண்டிராத வகையில் சாதனையைப் படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். பாமரர்களின் மனதில் சிம்மாசனமிட்டு எம்ஜிஆர் அமரும் அளவுக்கு அவரை கொண்டு சென்ற தத்துவப் பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியது பின்னணி பாடகர் டி … Read more

ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் மற்றும் முக்கிய விபரம் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் Z கான்செப்ட் அடிப்படையிலான விடா VX2 வரிசை ஸ்கூட்டரின் ரேஞ்சு 95 கிமீ முதல் 200 கிமீ வரையில் வெளிப்படுத்தும் வகையில் 2.2kwh முதல் 4.4kwh வரை பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கலாம். தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் 2.2kwh, 3.44kwh, மற்றும் 3.97 kwh என மூன்று பேட்டரி ஆப்ஷன் உள்ள நிலையில் வரவுள்ள விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் 4.4kwh பேட்டரி பெறக்கூடும். … Read more

CSK : 'இவங்களையெல்லாம் யோசிக்காம தூக்குங்க CSK!' – யார் யார் தெரியுமா?

‘சிஎஸ்கேவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய வீரர்கள்!’ சென்னை அணிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கொடுங்கனவாக நிறைவடைய இருக்கிறது. சென்னை ஏலத்தில் எடுத்திருந்ததில் பெரும்பாலும் எந்த வீரரும் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்படவில்லை. ஏல மேஜையிலேயே சென்னை அணி இந்த சீசனை இழந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. CSK அடுத்த சீசனுக்கு முன்பாக ஒரு மினி ஏலம் நடக்கும். அதற்கு சென்னை அணி தயாராக வேண்டும். இப்போதைய அணியில் இருக்கும் ஓட்டைகளை புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து அடைக்கவேண்டும். எனில், இப்போதைய அணியிலிருந்து தேவைப்படாத … Read more

மாநிலங்களுக்கான வரி பகிர்வு பங்கை 50% ஆக உயர்த்த வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நாட்டிலுள்ள நகர்ப்புற மேம்பாட்டுக்கு பெருமளவு நிதி கொண்ட பெரிய திட்டம் அவசியம் என்றும் மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களின் தொலைநோக்குப் பார்வை. “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற … Read more

இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் முக்கிய பங்காற்றினர்: சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்: 1. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பதன்கோட் மற்றும் சூரத்கர் பகுதியில் முகாமிட்டிருந்த வான் பாதுகாப்பு படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு பெண் கர்னல்கள் இடம் பெற்று பாகிஸ்தானின் … Read more