மாஸ்கோவில் ரஷ்ய செனட்டர்களுடன் கனிமொழி எம்.பி தலைமையிலான தூதுக் குழு சந்திப்பு

மாஸ்கோ: திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழு இன்று மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு விவகாரங்களுக்கான கூட்டமைப்பு கவுன்சில் குழுவின் முதல் துணைத் தலைவர் உட்பட செனட்டர்கள் பலரையும் சந்தித்தது. இது குறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக இணைந்துள்ளோம். ரஷ்யாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் முதல் துணைத் தலைவர் ஆண்ட்ரி டெனிசோவ் மற்றும் பிற செனட்டர்களுடன் எம்.பி கனிமொழி தலைமையிலான … Read more

சென்னையில் 2 நாட்களுக்கு 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை வரும் 24 மற்றும் 26 ஆம் தேதி சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன’ இன்று தெற்கு ரயில்வேம் “பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24, 26 தேதிகளில் மொத்தமாக 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.. பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, … Read more

137 பொறியியல் கல்லூரிகளுடன் தொழில்நுட்ப மையம் ஒப்பந்தம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், புத்தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான ‘ஜிக்சா’ தளத்தின் பயன்பாடு தமிழகத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘உமாஜின் – 2024’ மாநாட்டில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி-ஹப்) உருவாக்கிய ‘ஜிக்‌சா’ எனும் தளத்தை … Read more

கோட்டாவில் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்வது ஏன்? – ராஜஸ்தான் அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: ராஜஸ்தானின் கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகள் குறித்து அம்மாநில அரசை கடுமையாக சாடியிருக்கும் உச்ச நீதிமன்றம், நிலைமை மிகவும் தீவிரமானது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், “அரசாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தக் குழந்தைகள் கோட்டாவில் மட்டும் ஏன் இறக்கிறார்கள்? ஓர் அரசாக இதுபற்றி நீங்கள் யோசிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியது. … Read more

மின்சார கார் விற்பனையில் டெஸ்லாவை முந்தியது BYD

ஐரோப்பிய மின்சார வாகன விற்பனையில் சீனாவின் BYD நிறுவனம் டெஸ்லாவை முந்தியுள்ளதாக JATO டைனமிக்ஸ் அறிக்கையில் கூறியுள்ளது. டெஸ்லாவை விட சீன மின்சார வாகனமான BYD அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையிலும் முதல் முறையாக கடந்த மாதம் ஐரோப்பாவில் அதிக தூய்மையான பேட்டரி மின்சார வாகனங்களை விற்றுள்ளது. இது பிராந்தியத்தின் கார் சந்தைக்கு ஒரு “திருப்புமுனை தருணம்” என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆட்டோமொடிவ் புலனாய்வு நிறுவனத்தின் புதிய கார் பதிவு தரவு, நிறுவனம் அதன் … Read more

ஐபிஎல் : ஐதராபாத் அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை … Read more

'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' – தவெக அறிக்கை!

‘அரக்கோண சம்பவம் – தவெக கண்டனம்!’ அரக்கோணத்தில் திமுக-வின் இளைஞரணியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவர் மீது பெண் ஒருவர் அளித்திருக்கும் பாலியர் புகார் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அந்த சம்பவத்தைக் கண்டித்து தவெக சார்பில் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தவெக அறிக்கை தவெக அறிக்கை! அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றியத் திமுக இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகக் கல்லூரியில் … Read more

தூய்மை பணியாளர் திட்டத்தில் முறைகேடு: சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகையின் நெருங்கிய உறவினர் அங்கம் வகித்த நிறுவனம் அதிக லாபம் அடைந்ததாக குற்றம்சாட்டி சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மத்திய அரசின் நமஸ்தே என்ற திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடப்பதாக யூடியூபரான சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

“வங்கதேச உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்” – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

கொல்கத்தா: உள்நாட்டு பிரச்சினைகளில் இருந்து வெளிவர வங்கதேசத்துக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும், இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.கே.நாராயணன், “இந்தியாவுக்கு மிகப் பெரிய வலிமை உள்ளது என்பதை ஆபரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது. அதேநேரத்தில் அந்த வலிமை என்பது கட்டுப்பாட்டுடன் உள்ளது. அது ஒரு முக்கியமான செய்தி. நாம் ஒரு பொறுப்பான மற்றும் பெரிய சக்தி என்பதை … Read more

ஆர்சிபியை காலி செய்த எஸ்ஆர்ஹெச்.. 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டம் இன்று (மே 23) லக்னோவின் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஜிதேஷ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிரவிஸ் ஹெட் … Read more