சென்னை: சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021 ‘சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களை நிரத்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்து, இதுவரை நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்’ என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2021 தேர்தலின்போது, ‘தி.மு.க., […]
