கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை திடீரென அறிவித்தது மட்டுமன்றி எந்தவித முன்னேற்பாடுகள் குறித்தும் கவலைகொள்ளாமல் செயல்பட்டது தொடர்பாக KSCA மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க மாநில அரசும் போட்டி நடவடிக்கையில் இறங்கியதுடன் விதான் சவுதா அருகே ஆர்.சி.பி. அணி வீரர்களை அழைத்து கௌரவித்தது. … Read more