ஐ.பி.எல். 2025: முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் – முழு விவரம்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

இந்தியாவுடனான 4 நாள் மோதலில் பாகிஸ்தான் ஆயுத படைகள் இழந்தது என்ன…?

கராச்சி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் … Read more

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க, நீக்க எளிய முறை அறிமுகம்

சென்​னை: பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் `இணைப்பு ஜே’ என்ற பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்தலாம். இதுகுறித்து பாஸ்பார்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பாஸ்போர்ட் பெறுவதில் சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது. இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் … Read more

கரோனா தொற்றுக்கு 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நேற்று காலை 8 மணி வரையி​லான நில​வரப்​படி கரோனா வைரஸ் தொற்​றுக்கு சிகிச்சை பெறு​வோர் எண்​ணிக்கை 4,026 ஆக அதி​கரித்​துள்​ள​தாக மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தின் புள்ளி விவரம் கூறுகிறது. நேற்று காலை 8 மணி​யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்​தில் புதி​தாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்​யப்​பட்​டது. அத்​துடன் கேரளா, தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்​கத்​தில் தலா ஒரு​வர் மகா​ராஷ்டி​ரா​வில் 2 பேர் என மொத்​தம் 5 பேர் உயி​ரிழந்​தனர். இதன்​மூலம் இது​வரை … Read more

ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் – மத்திய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குறித்த பேட்டிகள், விவரங்கள் உள்ளிட்டவை குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராணுவ வீரர்கள், குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம். ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை பேட்டியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.தேசிய நலன் கருதி முக்கியமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் … Read more

இன்றிரவு ஒரு குழந்தையை போல் உறங்குவேன்… விராட் கோலி பேட்டி

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களல் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் … Read more

பாகிஸ்தானில் டிக்-டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர். இவர் பெண்கள் உரிமைகள், கல்வி குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் கருத்துகள், உள்ளிட்டவை பற்றி பதிவிட்டு வந்தார். அவரை சமூக வலைதளங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்தனர். இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூன் 2) திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை இரண்டு முறை … Read more

Shreyas Iyer : 'நாங்க இன்னும் ஓயல; அடுத்த வருஷம் கப் ஜெயிப்போம்!' – ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. Shreyas Iyer – RCB vs PBKS ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், ” ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் இவ்வளவு தூரம் வந்த விதத்தையும் எங்கள் வீரர்கள் ஆடிய விதத்தையும் எண்ணி பெருமைகொள்கிறேன். மும்பையுடன் ஆடிய விதத்தை வைத்து 200 ரன்கள்தான் இங்கே வெற்றி பெறுவதற்கான ஸ்கோர் என நினைத்தேன். அவர்கள் … Read more

திண்டுக்கல், தூத்துக்குடியில் நடந்த இரு வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திண்டுக்கல், தூத்துக்குடியில் நடைபெற்ற வெவ்வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள யாகப்பன்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் (60). இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே 23-ம் தேதி இரவு யாகப்பன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவரைப் பின்தொடர்ந்து சென்ற சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக அவர் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய யாகப்பன்பட்டி சேசுராஜ்(39) … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது – பின்னணி என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஷாகுர் கான். இவரை அண்மையில் போலீஸார் கைது செய்தனர். இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீண்ட நாட்களாக அவரைக் கண்காணித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் ஷாகுர் கானின் … Read more