சிறை காவலர் பணியிட மாற்ற உத்தரவை திரும்பபெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை சிறைத்துறை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சிறைத்துறை காவலர்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகே தங்களது … Read more

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை: இதுவரை 37 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர். வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாமில் … Read more

மழையால் இறுதிப்போட்டி ரத்தானால்… ஆர்சிபிக்கு கோப்பை கிடையாது – ஏன் தெரியுமா?

RCB vs PBKS IPL Finals 2025: ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.  RCB vs PBKS Finals: முதல் கோப்பை யாருக்கு? இரு அணிகளும் 18 வருடங்களாக இந்த ஒரு கோப்பைக்காகவே தவமாய் தவமிருந்து வந்தன. ஆர்சிபியை (Royal Challengers Bengaluru) பொருத்தவரை அனில் … Read more

பொறியியல் படிப்புக்கு இதுவரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பம்! அமைச்சர் கோ.வி.செழியன்

சென்னை:  தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன்  விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை (27 நாட்களில்) 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பித்து உள்ளனர் என  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான  ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 7ந்தேதி ( 07.05.2025 ) தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.  இதுவரை (02.07.2025) மாலை வரை வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை … Read more

Saregamapa: “தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' – `சரிகமப' அபினேஷ்

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 முடிவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார். திவினேஷைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 6 நபர்களில் அபினேஷையும், ஶ்ரீமதியையும் சந்தித்துப் பேசினோம். Saregamapa – Divinesh ஶ்ரீ மதி, ஏற்கெனவே சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வளவு பரிச்சயம். இவரும் இவருடைய சகோதரியும் இணைந்து பாடும் பாடல்களுக்கு அப்போது பெரிதளவில் வரவேற்பு கிடைத்தது. சொல்லப்போனால், ஏ.ஆர். ரஹ்மானே இவர்களுடைய காணொளியை ஷேர் செய்திருக்கிறார். … Read more

கோமாளி​ என்று சொல்பவர்கள் ஏமாளி​ ஆவார்கள்: திமுக தீர்மானம் குறித்து தமிழிசை விமர்சனம்

சென்னை: எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் என தமிழிசை தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு, இனி யாரும் குற்றம் இழைக்கக் கூடாது எனும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். ஆனால், அரக்கோணத்தில் இருந்து இன்னொரு கூக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் … Read more

ஒடிசா: மாவோயிஸ்ட் கொள்ளையடித்த 2.5 டன் வெடிபொருள் பறிமுதல்

ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2.5 டன் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒடிசா காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, ஜாகுவார் படை, சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட தன்னார்வ படை அடங்கிய கூட்டுப்படையினர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2.5 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வெடிபொருட்கள் … Read more

‘ஆபரேஷன் சிலந்தி வலை' மூலம் 41 ரஷ்ய போர் விமானங்களை உக்ரைன் அழித்தது எப்படி?

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ மூலம் 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்திருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா, அமூர் ஆகிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஒரே … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 தரும் தமிழக அரசு! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வைப்புத் தொகை கொடுக்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் மேடிசன் கீஸ்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), சக நாட்டு வீராங்கனையான ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹெய்லி … Read more