திண்டுக்கல், தூத்துக்குடியில் நடந்த இரு வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

திண்டுக்கல், தூத்துக்குடியில் நடைபெற்ற வெவ்வேறு கொலை வழக்குகளில் 11 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள யாகப்பன்பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப் (60). இவர், கடந்த 2024-ம் ஆண்டு மே 23-ம் தேதி இரவு யாகப்பன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இவரைப் பின்தொடர்ந்து சென்ற சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக அவர் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து, வழக்கில் தொடர்புடைய யாகப்பன்பட்டி சேசுராஜ்(39) … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது – பின்னணி என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்தில் உதவி நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஷாகுர் கான். இவரை அண்மையில் போலீஸார் கைது செய்தனர். இவர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நீண்ட நாட்களாக அவரைக் கண்காணித்து வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இஸ்லாமாபாத்துடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள் ஷாகுர் கானின் … Read more

தக்லைப் விவகாரம்: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எடியூரப்பா

பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது சரியல்ல. கன்னடம் உண்மையானது, கன்னடம் நித்தியமானது. இது கன்னடர்களின் அழுகுரல் மட்டுமல்ல. கன்னடத்தாய் புவனேஸ்வரி அம்மன் கன்னடர்களின் உறுதிமொழி ஆகும். மூத்த மொழியியல் நிபுணர்கள், கன்னடம் வேறு எந்த மொழியில் இருந்தும் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.ஆனால் நடிகர் கமல்ஹாசன் வரலாற்று நிபுணரும் இல்லை, மொழியியல் வல்லுநரும் இல்லை. அவர் … Read more

கோப்பையை வென்ற பெங்களூரு… ஆனந்த கண்ணீர் விட்ட விராட் கோலி

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் அவர் இருப்பார். தற்போது, தலைவர் பொறுப்பில், மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்க் உள்ளார். … Read more

RCB: 'கோப்பையை வென்றுகொடுத்த 3 ஓவர்கள்' – என்னென்ன தெரியுமா?

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தியிருக்கிறது பெங்களூரு அணி. ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஆர்சிபி அணிக்கும் கோலிக்கும் 18 ஆண்டுகால ஏக்கம். அந்த ஏக்கத்தையும் கனவையும் நிறைவேற்றிக்கொள்ள 3 ஓவர்கள்தான் காரணமாக இருந்தன. அந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தையே மாற்றியது. RCB vs PBKS முதலில் ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய அந்த 10 வது ஓவர். ஷெப்பர்ட் அவ்வளவு சிறந்த பௌலரெல்லாம் இல்லை. சில ஓவர்களை அவரை வைத்து … Read more

“பல ஆண்டுகளாக இந்தக் கனவைச் சுமந்தீர்கள்” – கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சிறப்பான ஆட்டம் ஆர்சிபி, ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சீசனில் ஒரு திரில் ஆன முடிவு. விராட் கோலி, இந்த கனவை நீங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறீர்கள். இந்த கிரீடம் உங்களுக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து ஒரு … Read more

ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி – ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் நாளை வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், ”தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர். கர்நாடக கன்னட கலை மற்றும் கலாச்சாரத் … Read more

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்  என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆன்லைன் சூத்தாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

பிரம்மபுத்திரா நதியை சீனாவால் தடுக்க முடியாது: பாகிஸ்தானுக்கு அசாம் முதல்-மந்திரி பதிலடி

கவுகாத்தி, காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரி வித்தார். இதற்கு அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:- காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய … Read more