சஞ்சீவ் கோயங்கா எடுத்த அதிரடி முடிவு! எல்எஸ்ஜி அணியில் ஏற்படும் 4 மாற்றங்கள்?

கேப்டன் கேஎல் ராகுலுடன் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்தமாக அணியை மாற்றியது எல்எஸ்ஜி. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில நல்ல வீரர்களை அணியில் தேர்வு செய்து இருந்தது. இருப்பினும் அவர்களால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 6 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சீசன் … Read more

இதுவரை மகளிர் விடியல் பயண திட்டத்தில் 139 கோடி முறை மகளிர் பயணம்

சென்னை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் 139 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். மகளிர் நலனுக்காக தமிழக அரசு, பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா். அரசால் சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு … Read more

ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார். இந்நிலையில், நீண்டநேரம் அவர் வெளியே வரவில்லை. இதனால் சுற்றியிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து கிஷன்கார் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அப்போது, அறையின் கதவு உட்புறத்தில் பூட்டப்பட்டு இருந்தது. இதன்பின்னர் தீயணைப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் உதவியுடன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்று … Read more

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீரர்

ஜகர்த்தா, இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோ கீன் யூ 22-20, 21-9 என்ற செட் கணக்கில் கிரண் ஜார்ஜை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று … Read more

கனடாவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 5 பேர் காயம்

டொரண்டோ, கனடாவின் டொரண்டோ நகரில் லாரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் ஜக்காரி கோர்ட்டு மற்றும் பிளெமிங்டன் சாலையருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், ஒருவர் பலியானார். ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் என 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், துப்பாக்கி குண்டு காயங்களால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். … Read more

5.6.2025 – இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தமிழக மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் கருத்து கூறுவதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களை அவமதிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருப்பது, தமிழக கல்வி மரபை இருட்டடிப்பு செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்களில் 7 ஆயிரம் மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்ற வாக்கியத்துடன், ‘அதற்கேற்ற கல்வியறிவும், திறமையும் இல்லை” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு விடுக்கப்படும் நேரடியான அவமதிப்பு. இது தமிழ்நாட்டின் கல்வி மரபை … Read more

குட்கா எச்சில் உமிழ வேகமாக ஓடிய காரில் கதவைத் திறந்ததால் விபத்து – சத்தீஸ்கரில் ஒருவர் உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் 100 கி.மீ. வேகத்தில் சென்ற சொகுசு காரிலிருந்து எச்சில் உமிழ்வதற்காக ஓட்டுநர் கதவைத் திறந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் பலமுறை சாலையில் உருண்டு மேலும் இரண்டு வாகனங்களில் மோதியுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (31). பிலாஸ்பூரின் புறநகரான சக்கர்பாதாவைச் சேர்ந்த துணி வியாபாரி ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் ஒரு விருந்தில் கலந்து … Read more

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடைஅறிவிக்கப்ப்பட்டுள்ளது, இன்று தமிழ்க மின்வாரியம். சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கொரட்டூர்: ரெட்டி தெரு , பாரதி நகர், ரயில் நிலைய சாலை, திருமுல்லைவாயல் சாலை , மாணிக்கம் பிள்ளை தெரு … Read more

கும்பமேளாவில் 50, 60 பேர் இறந்தனர்; நான் ஏதேனும் கேட்டேனா? சித்தராமையா

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். … Read more