ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக … Read more

பிரயாக்ராஜில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு: மத்திய கலாச்சாரத் துறை, ‘இந்து தமிழ் திசை' சார்பில் விழா ஏற்பாடுகள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன. இதன் சிறப்பு விருந்​தினர்​களாக … Read more

உலக அழகியாக ஓபல் சுச்சாட்டா தேர்வு… கேன்சரில் இருந்து மீண்ட சிங்கப்பெண் – யார் இவர்?

Miss World 2025: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகி ஓபல் சுச்சாட்டா, 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவரது ஊக்கம் அளிக்கும் வாழ்க்கை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கர்நாடகாவுக்கு சீமான் கண்டனம்

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஒரு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் பேசியது வெறும் கதை அல்ல, வரலாற்றை தான் எடுத்துச் சொன்னார். கமல்ஹாசன் கருத்தை ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்பதும் வேறு விஷயம். ஆனால் அவர் நடித்த ‘தக் லைப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்பது நியாயமா? ‘கே.ஜி.எப்.’ போன்ற கன்னட படங்களை தமிழகத்தில் சுதந்திரமாக … Read more

Bharathi Sridhar | 1.6.2025 – இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

கோடை விடுமுறை நிறைவு: அரசு பேருந்துகளை பயன்படுத்த வேண்டுகோள்

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து வரும் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே, சொந்த ஊர் சென்றவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ஏராளமான இருக்கைகள் உள்ளதால், அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து பயணித்தால், பேருந்து எண்ணிக்கையை கணக்கிட்டு, கூடுதல் சிறப்பு … Read more

‘ஆபரேஷன் சிந்தூரில் பிஎஸ்எஃப் வீராங்கனைகளின் வீரம் தனித்துவமானது’ – பிரதமர் மோடி புகழாரம்

போபால்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் “துணிச்சலான மகள்கள்” தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, ​​நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தை … Read more

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார். இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் … Read more

ஆபரேஷன் ஷீல்டு: எல்லை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போர்க்கால ஒத்திகை

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகர் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஆபரேஷன் ஷீல்டு’ நடவடிக்கையின் கீழ், பொது பாதுகாப்பு பயிற்சிகளின் ஒரு பகுதியாக இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின்போது வான்வழி தாக்குதல்கள், டிரோன் தாக்குதல்கள் மற்றும் பிற போர்க்கால சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக இந்த பயிற்சியை மே 29-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அதனை ஒத்திவைத்த நிலையில் … Read more

ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி

துபாய், ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறிவருகின்றனர். ஏனெனில் அந்த அணியில் வேகப்பந்துவீச்சு துறை தென் ஆப்பிரிக்காவை விட வலுவானதாக உள்ளது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்று தென் ஆப்பிரிக்க … Read more