PMK : மருத்துவர் ராமதாஸை சந்தித்தாரா அன்புமணி? தோட்டத்தில் நடந்தது என்ன? – லைவ் ரிப்போர்ட்

பா.ம.க-வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில், கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தன் மகள் வழிப் பேரனான முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். அதற்கு அந்த மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, `கட்சிக்காரர்கள் என்னை பனையூர் அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம்’ என்று மைக்கில் சொல்லிவிட்டு வெளியேறினார். `எங்களுக்கு எல்லாமே ஐயாதான்…’ அதன்பிறகு தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த அன்புமணி, `எங்களுக்கு … Read more

பொள்ளாச்சி வழக்கில் தொடர்புபடுத்தி வீடியோ: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க ஐகோர்ட் கால அவகாசம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு … Read more

அரசியல் கட்சி தொடங்குகிறார் சங்கராச்சாரியர் அவிமுக்தேஷ்வரானந்த்: பிஹார் தேர்தலில் போட்டி!

புதுடெல்லி: வட மாநிலங்களில் சங்கராச்சாரியராகக் கருதப்படும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதேபோல் வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். ஐந்து பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தராகண்டின் சமோலி மாவட்டத்திலுள்ள ஜோதிஷ்வர் பீடம். இதன் தலைவரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, சங்கராச்சாரியர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், தொடர்ந்து பசு பாதுகாப்பு மற்றும் பசுவதைத் தடை சட்டத்தை நாடு முழுவதிலும் அமலாக்க … Read more

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் … Read more

அயலி சீரியல் அப்டேட்: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம்.. சிவாவுக்கு ஷாக் கொடுத்த அயலி

Ayali Today’s Episode Update: இந்திராணி சொன்ன கல்யாண விஷயம் என்ன? அயலியால் சிவாவுக்கு கிடைத்த ஷாக் கொடுத்த அயலி. அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.  

நாளை பொது விடுமுறை? பள்ளி, வங்கிகள் செயல்படுமா? Fact Check சொல்லும் உண்மை என்ன?

Fact Check Public Holiday: நாளை நாடு முழுவதும் பொது விடுமுறை.. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி. உண்மை என்ன? விளக்கம் அளித்த உண்மை சரிபார்ப்பு மையம்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு பெரிய கிரிமினல்.. விளாசிய யுவராஜ் சிங்கின் தந்தை!

Yograj Singh: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்களை அடித்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

“எங்களை போன்ற இயக்குநர்கள் படுகின்ற பாடு எல்லாம் பெரிய கொடுமை; என் மகன்..'' – தங்கர் பச்சான்

இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நடித்த ‘பேரன்பும் பெருங்கோவமும்’ திரைப்படம் இன்று (ஜூன்5) வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்தில் நடிகை ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.  இளையராஜா இசையில் வெளியாகவுள்ள இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது.  ‘பேரன்பும் பெருங்கோவமும்’ இந்நிலையில்  தங்கர் பச்சான் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ மூன்று ஆண்டுகளுக்கு மேலாக  ‘பேரன்பும் பெருங்கோவமும்’ படத்தின் வேலைகள் … Read more

போலி SIM கார்டு மோசடி: உங்கள் பெயரில் போலி SIM உள்ளதா என்பதை சரிபார்க்கவும்

How to Check for Fake SIM Cards : போலி SIM கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. இது சைபர் கிரைம் ஆகும். எனவே, மொபைல் சிம் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் மோசடி மூலம் SIM வாங்கப்பட்டு, அது தவறாக பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு சட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் பெயரில் எத்தனை SIM கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து … Read more

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் மோடி – வீடியோ

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில்  சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்   ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்டார்.   அவரே  மரத்தை வைக்கும் வகையில்,  மண்வெட்டி வைத்து குழி தோண்டி, மரக்கன்றை நடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இன்று (ஜூன் 5)  உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ல் உலக சுற்றுச்சூழல் … Read more