ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான … Read more

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அசாம் அரசு

வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா – வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட 49 பேரை கடந்த 27 மற்றும் 29-ம் தேதிகளில் அசாம் அரசு வெளியேற்றியது. அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேச இடையே உள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா … Read more

வளர்ந்து வரும் ஏஐ நுட்ப போர் முறை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பேச்சு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும் போர் முறை குறித்தும், அதில் ஏஐ பங்கு குறித்தும் அவர் எச்சரித்தார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இது ஆசிய அளவிலான முக்கிய பாதுகாப்பு உச்சி மாநாடு … Read more

ஒருநாள் போட்டிகளில் வருகிறது புதிய விதி! இனி டி20 போல சுவாரசியமாக இருக்கும்?

முன்பு கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தான். ஆனால் தற்போது காலத்திற்கு ஏற்றவாறு கிரிக்கெட் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது, அதன் புதிய வடிவம் தான் டி20 போட்டிகள். இந்த டி20 போட்டிகள் வந்ததிலிருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது.  தற்போது இளம் வயது வீரர்கள் அனைவரும் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களது பேட்டிங்கை மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் முன்பு போல ஒரு சிறந்த ஒருநாள் … Read more

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 363 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 383 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இரண்டு பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கொரோனாவின் புதிய மாறுபாடு மிதமான தொற்று தான் என்றும் இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் … Read more

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு. நயினார் நாகேந்திரன் ஒரு முதலமைச்சருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்தது அவரின் … Read more

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “தமிழ்நாட்டில் திண்டிவனம் – திருவண்ணாமலை, சென்னை – மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடியை ரயில்வே … Read more

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு!

குவாஹாட்டி: தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம், அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூரில் கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 22 பேர் சனிக்கிழமை (மே 31) அன்று மட்டும் உயிரிழந்தனர். இதனை அரசு தரப்பு உறுதி … Read more

உயர்கல்வியை முடித்த சூர்யா மகள் தியா.. அடுத்து அம்மா ஜோதிகாவை வைத்து இயக்க பிளான்னிங்கா?

நேற்று முதல் தியாவுக்கும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  

அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம் – ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.