பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

புதுடெல்லி: அனைத்து பயணிகளின் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் நோக்கில், ரயில்ஒன் செயலியை(RailOne App) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரயில்வே தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய தலைமுறை ரயில்களை அறிமுகப்படுத்துவது, ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வது, பழைய ரயில் பெட்டிகளை புதிய ரயில் பெட்டிகளாக மேம்படுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, பயணிகளின் அனுபவத்தை … Read more

இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை

வாஷங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா – அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், நேற்று (ஜூன் 30) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அமெரிக்கா எவ்வாறு கருதுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கரோலின் லீவிட், “ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா மிகவும் … Read more

3BHK to மாரீசன்-ஜூலை மாதம் ரிலீஸாகும் 5 புது தமிழ் படங்கள்! எந்த படத்தை, எந்த தேதியில் பார்க்கலாம்?

July 2025 New Movie Releases In Tamil : இந்த ஜூலை மாதம், பல படங்கள் தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா?  

அஜித்குமார் லாக்கப் மரணம்: 'கொலைக்காரன் கூட இப்படி அடிக்க மாட்டான்' – உயர்நீதிமன்ற உத்தரவு என்ன?

Ajithkumar Lockup Death: அஜித் குமார் லாக்கப் மரணம் வழக்கில் நீதி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Maargan: 'திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது'- கார்த்திக் சுப்புராஜ்

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ” ‘மார்கன்’ திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. மார்கன் படத்தின் முதல் Frame தொடங்கி திரைப்படம் முழுவதும் நம்மை த்ரில்லருக்குள் அழைத்து செல்கிறது. இப்படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறாதீர்கள். அசத்தலான அறிமுக இயக்குநர் லியோ ஜான் … Read more

ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரிப்பு : நடிகை குஷ்பு

மும்பை பிரபல நடிகை குஷ்பு ஊடகங்கள் வருகையால் உருவ கேலி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்த பிரப்ல நடிகை குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, பிரபலங்கள் மீதான விமர்சனங்களும், கேலிகளும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, நடிகைகளின் உடல்வாகு, உடை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. உருவ கேலி கலாசாரத்தால் பல பிரபலங்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எங்களது மகள்களின் உயரத்தையும், உடல்வாகையும் சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர். ஆனால் … Read more

தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர் என நேற்று தகவல் வெளியானது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் அல்காரஸ் போராடி வெற்றி

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் முதல் நாளில் முதலாவது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் தொடக்க நாளிலேயே நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதல் தடையை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. அவருக்கு தரவரிசையில் 138-வது இடத்தில் உள்ள 38 வயதான பாபியோ போக்னினி (இத்தாலி) கடும் சவால் அளித்து வியப்பூட்டினார். இதனால் அல்காரஸ் 5 … Read more

காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: உணவு தேடி வந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 74 பேர் பலியான சோகம்

கெய்ரோ, ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாகிறது. இந்த பின்னணியில், காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் … Read more

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' – எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.  அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கட்டண உயர்வு என்று தம்பட்டம் அடிக்கிறது பாஜக. புறநகர் பயண கட்டணமும் சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. இரண்டாம் வகுப்பு சாதாரண வண்டிகள் 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 501 க்கு மேல் 1500 வரை ஐந்து ரூபாய் உயர்வு. … Read more