கொழும்பு,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் அந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி தென்னாப்பிரிக்கா 1 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.