சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்ற ழுத்த தாழ்வு காரணமாக சென்னை, கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நேற்று பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.