நவி மும்பை,
ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய 24-வது ஆட்டத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மராட்டியத்தின் நவி மும்பை நகரில் நடந்து வரும் போட்டியில், நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இந்நிலையில், தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா விளையாடினர். அவர்கள் இருவரும் அசத்தலாக விளையாடி சதம் அடித்தனர். பிரதிகா 122 (134 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார்.
ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரதிகாவின் முதல் சதம் இதுவாகும். மந்தனா 109 (95 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்துள்ளார். ரோட்ரிக்ஸ் (69), ஹர்மன்ப்ரீத் கவுர் (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
48 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 329 ரன்கள் குவித்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் மற்றும் சுஜி பேட்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்திய பெண்கள் அணி: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்
நியூசிலாந்து பெண்கள் அணி: சுஜி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹல்லிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்