குண்டு வெடித்த காரை ஓட்டியது உமர் தான்: தாயாரின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி

புதுடெல்லி: டெல்​லி​யில் வெடித்த காரை ஓட்​டிச் சென்​றது மருத்​து​வர் உமர் நபி-தான் என்​பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. சம்பவ நாளில் டெல்லி முழு​வதும் பல்​வேறு சிசிடிவி பதிவு​களில் அவரது முகம் பதி​வாகி​யிருந்​தது.

ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழக மருத்​து​வக் கல்​லூரி​யில் இவர் பணி​யாற்றி வந்​தார். இவர் அங்​குள்ள மருத்​து​வர்​கள் சிலருடன் சேர்ந்து நாடு முழு​வதும் தொடர் குண்டு வெடிப்​பு​களை நிகழ்த்த மிகப்​பெரிய சதித் திட்​டங்​களை தீட்​டியது ஒவ்​வொன்​றாக தெரிய​வந்​தது. ஜெய்ஷ் இ முகமது, அன்​சார் கஸ்​வத்​-உல்​-ஹிந்த் ஆகிய அமைப்​பு​களு​டன் இவர்​களுக்கு தொடர்பு இருப்​பதும் அடுத்த சில மணி நேரத்​தில் தெரிய​வந்​தது. இதையடுத்து 3 மருத்​து​வர்​கள் உள்​ளிட்ட 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

உமர் நபி​யின் தாயாரிடம் இருந்து கடந்த செவ்​வாய்க்​கிழமை டிஎன்ஏ மாதிரி​கள் சேகரிக்​கப்​பட்டு பரிசோதனைக்கு அனுப்​பப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த மாதிரி​களின் மூலக்​கூறுகளும் வெடித்து சிதறிய காரில் இருந்த உமரின் உடல்​பாக மூலக்​கூறுகளும் ஒத்​துப்​போவது பகுப்​பாய்​வில் தெரிய​வந்​துள்​ளது. எனவே காரை ஓட்டி வந்​தது உமர் நபி​தான் என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இந்த ஒயிட் காலர் தீவிர​வாதத்​தின் முக்​கிய சதி​கார​ராக உமர் நபி இருந்​துள்​ளார். குண்டு வெடிப்பை தொடர்ந்து 200-க்​கும் மேற்​பட்ட கண்காணிப்பு கேம​ராக்​களின் பதிவு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டது. இதில் குண்டு வெடிப்​புக்கு சில மணி நேரத்​துக்கு முன் உமர் நபி, ராம்​லீலா மைதானத்​துக்கு அரு​கில் உள்ள ஒரு மசூ​திக்கு அரு​கில் இருப்​பதை காண​முடிகிறது. இதன் மூலம் குண்டு வெடிப்பை நிகழ்த்​து​வதற்கு முன் அவர் மசூ​திக்கு சென்​றிருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.

வெடித்து சிதறிய ஹுன்​டார் ஐ20 காருடன் மேலும் 2 கார்​களை குண்டு வெடிப்பை நிகழ்த்​து​வதற்​காக தீவிர​வா​தி​கள் வாங்​கியது தெரிய​வந்​தது. இதில் சிவப்பு நிற ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் கார், ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள கண்​ட​வலி கிராமத்​தில் இருந்து நேற்று முன்​தினம் மாலை பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்​கள் இந்த காரை ஆய்வு செய்​தனர். காரை சுற்​றி​லும் 200 மீட்​டர் பகு​தி​களை போலீ​சார் சுற்றி வளைத்​துள்​ளனர், இந்நிலையில் 3-வது காரை (மாருதி சூசுகி ப்ரெஸ்​ஸா) பறிமுதல் செய்துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.