IND vs SA, Team India ODI Captaincy: தென்னாப்பிரிக்க அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் என டிசம்பரின் பிற்பகுதி வரை இந்தச் சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
IND vs SA: சுப்மான் கில் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா?
கடந்த நவ. 14ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் நவ. 22ஆம் தேதி கௌகாத்தி நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சி என்றால், கேப்டன் சுப்மான் கில்லுக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டுள்ளது.
முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 பந்துகளை சந்தித்தபோது அவருக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டது. அதன்பின் அவர் பேட்டிங் செய்யவே இல்லை. இந்திய அணி இரண்டு இன்னிங்ஸில் 10 பேட்டர்களுடன் மட்டுமே விளையாடியிருந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் சுப்மான் கில், எப்போது அணிக்கு திரும்புவார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், இன்னும் மூன்று நாள்களில் தொடங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ரிஷப் பண்ட் முதல் போட்டியை போல், 2வது போட்டியிலும் கேப்டன்ஸியை கவனித்துக்கொள்வார் எனலாம். சுப்மான் கில் விலகல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, ரஞ்சி கோப்பை 5வது சுற்று முடிவடைவதால் இன்று கில்லின் மாற்று வீரர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs SA: ஷ்ரேயாஸ் ஐயரும் இல்லை…
டெஸ்ட் தொடர் ஒருபுறம் இருக்க, வரும் நவ. 30ஆம் தேதி இந்தியா – தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வியே தற்போது எழுந்திருக்கிறது. கடந்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இந்திய ஓடிஐ அணியின் கேப்டனாக சுப்மான் கில் மற்றும் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் செயல்பட்டனர். கில் கழுத்து சுளுக்கு காரணமாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் மண்ணீரல் காயம் காரணமாகவும் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவு எனலாம். ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்றும் சுப்மான் கில் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மட்டும் தவறவிடலாம் என கூறப்படுகிறது.
IND vs SA: மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா?
இந்தச் சூழலில், இந்திய அணியின் ஓடிஐ கேப்டன்ஸி மீண்டும் ரோஹித் சர்மாவின் வசம் வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணியை பொருத்தவரை கில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் ஓடிஐ கேப்டன்ஸியை பெற்றார். தற்போது 2வது தொடரிலேயே அவர் விளையாட வாய்ப்பில்லை என்ற நிலையில், துணை கேப்டனும் இல்லாத சூழலில் முந்தைய கேப்டனான ரோஹித் வசம் கேப்டன்ஸி செல்வதே சரியாக இருக்கும் என இணையத்தில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ரோஹித் சர்மா டி20ஐ மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து கே.எல். ராகுல் மட்டுமே சீனியராக உள்ளார்.
IND vs SA: வேறு யாருக்கு வாய்ப்பு?
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயத்தில் இருந்து குணமடைந்து தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடரில் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை கேப்டன்ஸி ரோஹித் சர்மா வசம் செல்லாதபட்சத்தில், கேஎல் ராகுல் அல்லது ஹர்திக் பாண்டியா ஓடிஐ அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. கேஎல் ராகுல் இதுவரை 12 ஓடிஐ போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 8 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஹர்திக் பாண்டியா இதுவரை 3 ஓடிஐ போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அதில் இரண்டில் வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார்.
IND vs SA: எப்போது ஓடிஐ ஸ்குவாட் அறிவிக்கப்படும்?
மறுமுனையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 56 போட்டிகளில் விளையாடி, 42 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும்போது ஓடிஐ தொடருக்கான இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | IND vs SA: ஷுப்மன் கில் நிலைமை என்ன? இந்திய அணியில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
மேலும் படிக்க | 2வது டெஸ்ட்டில் இருந்து விலகும் சுப்மன் கில்.. அவருக்கு பதில் வரும் CSK வீரர்? முழு விவரம்!
மேலும் படிக்க | 2வது டெஸ்ட் போட்டியில் கில் இடத்தில் யார்? கவுதம் கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More