ரிமோட்டை வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் ‘கஷ்டமான’ விளக்கம்

ரிமோட்டை டிவி மீது வீசி​விட்டு திமுக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் புது விளக்​கம் ஒன்றை அளித்​துள்​ளார்.

தஞ்​சாவூர் அருகே உள்ள செங்​கிப்​பட்​டியை அடுத்த புதுக்​கரியப்​பட்​டி​யில் கவிஞர் சினேக​னின் முயற்​சி​யால் நம்​மவர் நூல​கம், படிப்​பகம், கலைக்​கூடம் ஆகிய​வற்​றுக்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரும், எம்​.பி-​யு​மான கமல்​ஹாசன் பேசி​ய​தாவது: அன்பு கட்​சியை தாண்​டியது. அண்​ணா​வின் மேல் எனக்கு இருக்​கும் அன்​பும் அப்​படிப்பட்​டது​தான். அவர்​களிடம் கற்ற பிள்​ளை​கள் அனை​வ​ருக்​கும், அவர்​களிடம் கற்​றவர்​களுக்​கும், இதே குணா​திசயம் இருப்​பதை நான் பார்த்​திருக்​கிறேன். பதவி வரும்​போது, பணி​வும், துணி​வும் வர வேண்​டும். பணிவுக்​காக, துணிவை இழக்​கும் சுயமரி​யாதை அற்​றவர்​கள் அல்ல எங்​கள் கூட்​டம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.