சிவகங்கை: 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த காமூகனுக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம், 5 மரண தண்டனைகளை விதித்து அதிரடி காட்டி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ7 லட்சம் வீதம் மொத்தம் ரூ35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் போதை பழக்கம், பாலியல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றவாளிகள் எளிதில் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. […]