சென்னை: இன்று சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக இன்று மாலை முதல் இரண்டு நாட்கள் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. திருவண்ணாமலையில், அண்ணாமலையாக வீற்றிருக்கும், உலகை ஆளும் எம்பெருமான் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நெருப்பிற்கான தலம் ஆகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற புகழ்பெற்ற தலமாகும். ‘இங்கு […]