பாகுபலி பாடகர் திருமணம்

சென்னை: தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்ற ‘மனோகரி’என்ற பாடலைப் பாடியிருந்தவர், எல்.வி.ரேவந்த். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற படத்திலும் பாடியுள்ளார். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் எல்.வி.ரேவந்த், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்திலும் பாடியிருந்தார். அவருக்கும், அன்விதா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய திருமணம் ஆந்திர மாநிலத்தில் எளியமுறையில் நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.