ரயில் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நேற்று (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று (29) இரவு போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

புகையிரத பயணச் சீட்டுக்களின் கட்டணத்தை தன்னிச்சையாக அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து ரயில் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.