விழுப்புரத்தில் காவல் உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக 4 பேர் கைது.!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே காவல் உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரவாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவரத்தினம் உள்ளிட்ட போலீசார் பனையபுரம் – திருக்கனூர் இடையே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த 2 லாரிகள் நிற்காமல் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் மீது மோதுவது போல் வேகமாக வந்து,பின்னர் நின்றதாக கூறப்படுகிறது. லாரியை சோதனை இட்ட போது,ரெட்டிக்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் தேவரத்தினம் அளித்த புகாரின் பேரில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 4 பேரை கைது செய்த போலீசார், மணல் கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.