பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரவலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வீதியில் சென்றவர்களுக்கும், பேருந்தில் மரண சடங்கில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த நபர்களுக்கும் இடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் தகராறு தீர்த்து வைத்த பின்னர் தொடர்ந்து வீதியிலும், பேருந்தில் இருந்த சுமார் 06 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பேருந்தில் இருந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் எஹெலியகொட, பின்தெனிய, தியஹொடல்ல, பிலிவலகன மற்றும் மல்மடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.