ஏ.ஆர்.ரஹ்மான் 30 : நினைவுகள் பகிர்ந்த மணிரத்னம் நிறுவனம்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா பிசியாக இசையமைத்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு மாற்றாக பாலச்சந்தர், மணிரத்தினம் போன்ற இயக்குனர்களின் புதிய கண்டுபிடிப்பாக இசைப்புயலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். பாலசந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் முதன்முதலாக இவரது இசைப்பயணம் வெற்றிகரமாக துவங்கியது. அதைத்தொடர்ந்து தாங்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களிலும் வெற்றிப்பாடல்களை கொடுத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம் கூட்டணி இன்று வரை முப்பது வருடங்களாக வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 1992 ஆகஸ்ட் 15-ல் வெளியான ரோஜா திரைப்படம் மட்டுமல்ல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் முப்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுகுறித்த நினைவுகளை பகிரும் விதமாக ரோஜா படத்தில் பணியாற்றியபோது இயக்குனர் மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.