ஜப்பான் பிரதமருக்கு கொரோனா| Dinamalar

டோக்கியோ-ஜப்பான் பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, 65, சில நாட்களாக சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து லேசான காய்ச்சலும் ஏற்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மாளிகையிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.