கெய்ரோ:சூடானில், ஜன., முதல் ஆக., வரை, பழங்குடி இனத்தவரிடையே நடந்த மோதல்களில் 380பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் பழங்குடி இன குழுக்களுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து அங்கு குழப்பமும், அமைதியின்மையும் நீடிப்பதால், 1.77 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வருடம், ஜன., முதல் ஆக., வரை நிகழ்ந்த ௨௨௪ மோதல்களில் 380பேர் கொல்லப்பட்டு உள்ளனர்; 430க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில், புளூநைல் மாகாணத்தில், நான்கு நாட்களுக்கு நீடித்த மோதலில், இரண்டு குழந்தைகள் உட்பட 23பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10 குழந்தைகள் உட்பட23 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ:சூடானில், ஜன., முதல் ஆக., வரை, பழங்குடி இனத்தவரிடையே நடந்த மோதல்களில் 380பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.ஐ.நா.,வின் மனிதநேய ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்